கோவிட் தொற்றுநோய் நிலைமையிலும் ஸ்ரீலங்கன் விமானசேவை சமீபத்தில் 08 புதிய இடங்களுக்கு நேரடி விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் எதிர்காலத்தில் 05 உத்தேச இடங்களுக்கு புதிய விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

06 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் புதிய விமான சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வில் அண்மையில் பிரான்சின் பாரிஸில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார். பிரான்சில் உள்ள பல முன்னணி பயண நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஹொங்கொங், கொரியா, கென்யா, ஜேர்மனி, ரஷ்யா, அவுஸ்திரேலியா, நேபாளம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் விமானசேவை அண்மையில் புதிய சேவைகளை ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் வியட்நாம், இந்தியா, சீனா மற்றும் இஸ்ரேலுக்கு ஐந்து புதிய விமானங்கள் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமானசேவையில் பயணிக்கும் பயணிகள் மற்றும் சரக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் விமானசேவை புதிய இடங்களை அறிமுகப்படுத்துகிறது. இதற்காக பல நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவிட் நிலைமைக்கு தேசிய விமான சேவை பெரும் பங்காற்றியதாகவும், இந்நிலைமை காரணமாக இலங்கைக்கு பாதுகாப்பாக வர முடியாத இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். கோவிட் நிலைமையின்போது சர்வதேச எல்லைகள் மட்டுப்பட்டிருந்த மற்றும் சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்த வேளையில் ஸ்ரீலங்கன் விமானசேவை இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் சுற்றுலாத்துறை தற்போது படிப்படியாக மீட்சியடைந்து வருவதாகவும், அடுத்த வருடத்தில் அது முழுமையாக மீட்சி பெறுமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார். இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் நவம்பர் 02 ஆம் திகதி வரையில் 63,641 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அன்றைய காலகட்டத்தில் இலங்கைக்குப் பயணிக்கும் சிறந்த 10 சுற்றுலா நாடுகளில் பிரான்ஸும் ஒன்றாக இருந்ததாகவும், எதிர்வரும் காலங்களில் அதிகளவான பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சருடன் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதி பேராசிரியர் ஷனிகா ஹிரம்புரேகம, ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே, பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல குணதிலக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

250039415 447137460100765 2325606675334842211 n

 

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Mega Travel Influencer ‘Nas Daily’ join-hands to promote Tourism in Sri Lanka

Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB), under The Ministry of Tourism and Lands welcomed World's Top Travel Influencer Nusier Yassin also known as ''Nas Daily'’ to promote Sri Lanka as One of Best Travel Destinat

Continue Reading

Sri Lanka celebrates its milestone surpassing 100,000 Russian arrivals through direct flights

Sri Lanka Tourism Promotion Bureau, in collaboration with Airport and Aviation Services organized a special ceremony to celebrate 100,000 tourist arrivals from Russian Federation through direct flights.

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

No events available

Exit
மாவட்டம்